|
அவுஸ்திரேலியாவில்
சமாதான நீதவான்

V.M. தேவராஜன் J.P.
நெல்லியடியை பிறப்பிடமாகக்கொண்டவரும் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிப்பவருமான இவர் நியூ சவுத்வேல்ஸ் மானிலத்தின் சமாதான நீதவானாக ஆளுனரால் நியமிக்கப்பட்டுள்ளார். வென்ற்வேத்வில் அவுஸ்திரேலிய மூத்த தமிழர் சங்கத்தின் செயலாளராக சமூகப்பணியாற்றும் இவர்; தம் தாய் மண்ணில், நெல்லியடி சன சமூக நிலையத்தின் தலைவராக (1972), முருகமூர்த்தி ஆலய நிர்வாக சபையின் செயலாளராக (1973),
நெல்லியடி சன்மார்க்க சபையின் ஆரம்பகால பொருளாளராக(1973-1974), பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சிக்கன கூட்டுறவு ஊழியர் நலன்புரிச் சங்கத்தினதும், வைத்தியசாலை அபிவிருத்தி சபையினதும் பொருளாளராக (1986 – 1995), இப்படிப் பல வகையில் பொதுப்பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இவரின் சேவை புலம் பெயர்ந்த நாட்டிலும் மேலும் பல்லாண்டுகள் தொடர வாழ்த்துகிறோம்.
-நெல்லியடி சன சமூக நிலையத்தினர்.
|